திரு;மதி!
“ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா?” என்ற வைரமுத்து எழுத்துக்களின் உண்மையை சிலர் அனுபவித்திருப்பார்கள். அதில் ஒருத்தி நான். சில கால சுழற்சிகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே வாழ்க்கையின் பாதியாக மாறிவிட்டது. புரிந்த சில பக்கங்களின் அழகை ரசிக்க கற்றுக் கொண்டால், சலனங்களில் சோர்வு நேராமல் தவிர்க்கலாம். அப்படி ஒரு அழகான பக்கத்தை விவரிக்க எண்ணி இந்த உரையை எழுதுகிறேன். கல்லூரி நாட்களில் கவிதைகள் அதிகமாக எழுதுவேன். அப்படி எழுதும் சில கவிதைகளில் உணர்ச்சி குறிகள் அதிகமாக பயன்படுத்துவேன். அதை சரியான இடங்களில் உபயோகிக்கும்படி கருத்துக்கள் வந்தது. நானும் அதை மனதில் கொண்டு பல வருடங்களாக என் உணர்ச்சி குறிக்கு சரியான இடத்தை தேட தொடங்கினேன். அந்த தேடல் ஒரு அரைப்புள்ளியிடம் என்னை சேர்த்தது. ஒரு பக்குவப்பட்ட உறவை தேடி அலைந்த எனக்கு எட்டு மாதம் முன்னர் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயரின் அறிமுகம் கிடைத்தது. 90ஸ் சிங்கிள் களின் தற்போதைய சமூக வலைத்தளமான செயல்படும் ஒரு மேட்ரிமோனி மூலம் தான் அவர் அறிமுகமானார். இருபதுக்கும் மே...