Posts

Showing posts from August, 2015

இடிபாடுகளில் சிக்கிய நினைவுகள்

Image
முதல் என்ற வார்த்தைக்கு அனைவர் மனத்திலும் தனி இடம் இருக்கும் .  முதல் வாழ்த்து  ,  முதல் காதல்  ,  முதல் முத்தம்  .  இதெல்லாம் என்றும் அடி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் .  அதே போல் தான் முதல் வீடும் .  சிலருக்கு நான் கூறுவது விசித்திரமாக இருக்கலாம் .  எனினும் ,  ஒரே வீட்டில், பிறந்தது முதல் இருபது வருடங்கள் வரை வசித்திருந்தால் நீங்கள் உணர்ந்திருப்பீர் .  அதை பிரியும் தருணத்தில் ஏதோ ஒரு விதமான இழப்பை .  மேலும் அதை அழிக்க ப்  போகிறார்கள் என்றால் ,  உன்னுடன் இளைப்பாறிய ஒரு தோழனின் முடிவை காணும் வலியை தரும்  .         வயது ஐந்து நாட்கள் இருக்கும் ,  அது என்னை தழுவிக் கொண்ட போது  . இருபது வருடங்களாக என் கனாக்களைத் தேக்கிவைத்துள்ளது .    என் தாய் ஓய்வெடுக்க என்னை அந்தத் தரையையே தாங்கச் செய்தாள் .  தன்னைப் போல் என்னைத் தாங்கும் என்ற நம்பிக்கையில் .  என் கால்களால் அதிகமாக உதைத்த இடம் .  நான் தவழும் நாட்கள் தொடங்கி இன்று கம்பீர நடைபோட...

கொல்கத்தா

Image
மாசற்ற மார்கழியின் துவக்கத்தில், கிழக்கு நோக்கி பயணம்... மெதுவாக மண்மனம் மாற,  வங்காள வாசம் வீசியது..   காற்றில் மிதக்கின்ற பாலமாய், கரைகளை இணைத்த கரங்களாய், பிரம்மாண்டமாய் நின்றது ஹாவுரா.. காசியில் விளையாடிய மகளுக்கு, கொல்கத்தாவில் பூபுனித விழா, திருமணத்துக்கு தயாராகும் கங்கா.. விவேகானந்தரை உருவாக்கிய குரு, உன்னத கருத்துகளை பகிர்ந்த, இராமகிருஷ்ணரின் நினைவுச் சின்னம்.. ருத்ரதாண்டவத்தால் துண்டானாள் சக்தி, பாதங்கள் விழுந்தன வங்காளத்தில், நாவினால் ஈர்க்கும் காளி.. மலைகளுடன் ஊடல் கொள்ள, ஞாயிரும் மறையும் அவசரமாக, காண கூடுவோர்கென்று பூங்கா.. கார்குழல்கள் அருவியாய் பாயும், கருநிறம் கண்களில் மட்டும், பால் நிறமான மங்கைகள்.. வானளாவிய நேர் கோபுரங்களாக, திறமைகளுக்கு வானமே எல்லையென, உணர்த்தும் உயர்ந்த கட்டிடங்கள்.. மாற்றான் ஆண்டான் தாய்மண்னை, வளங்களை தந்தோம் தியாகியாக, கடத்திச்செல்ல துறைமுகமானது கல்கத்தா.. வெள்ளையர்களின் சுவடுகளாகத் திகழும், இரு தசாப்தமாக நிருவப்பட்ட, விக்டோரியாவுக்கு சமர்பணமான மாளிகை.. அணுஅணுவாய்...